மதுரை தல்லாகுளம் பகுதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சின்ன சொக்கி குளம் சப்பானிகோவில்தெருவைச்சேர்ந்தவர்சங்கீதா20.இவர்சிலதினங்களாகமன உளைச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்மா பாரத ரத்னா கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(2) மதுரை செல்லூரில் பணப்பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் நாகஜோதி 48. இவர்பணப் பிரச்சினையில் இருந்து வந்தார் .இதனால் மனமுடைந்து காணப்பட்ட வர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .இவரை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கணவர்பாலகுருசெல்லூர் போலீசில் புகாரர் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(3)நகை மோசடி ஆசாமி என நினைத்துகிராமமக்கள் பிடித்து வைத்திருந்த வடமாநில வாலிபர் விஷம் குடித்து தற்கொலைமதுரை அருகே தெற்குவளவு ஏ.வீள்ளாளபட்டி கிராமத்திற்கு வடமாநில வாலிபர்கள் இருவர் சென்றுள்ளனர்.அவர்கள் நகை பாலீஷ் செய்வது போல் ஏமாற்றும் நபர்கள் என சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் .இவனால் மனமுடைந்த ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரைபோலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலம் ஜரிகா என்ற ஊரைச்சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக ஏ.வெள்ளாளபட்டி கிராம நிர்வாக அதிகாரி சின்னராஜா கொடுத்தபுகாரில் மேலவளவு போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.