31
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண்களிடம் அடுத்தடுத்து செயின் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய மதுரை மாவட்டம் மாத்தூர் பூண்டிவிலக்குவை சேர்ந்தவர் இந்திரா 59 .இவரிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் திருடி விட்டனர். இவரைப்போல மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் கம்பர் தெருவை சேர்ந்த அமுதா 62 என்பவரிடமிருந்தும் 3 பவுன் தங்க செயினை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக இந்திராவும் , அமுதாவும் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து இருவரிடமும் செயின்திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.