Home செய்திகள் தெப்பகுளத்தில் தண்ணீர் எடுக்கசென்ற சிறுவன் தெப்பநீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்.

தெப்பகுளத்தில் தண்ணீர் எடுக்கசென்ற சிறுவன் தெப்பநீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்.

by mohan

மதுரை இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த சிறுவனான தமிழரசன் தனது பெற்றோர் இல்லாத நிலையில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்துவந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தமிழரசன் தனது நண்பர்களோடு அருகில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு நீர் நிரப்பகூடியஇணைப்பு தெப்ப குழியில் வீட்டிற்கு பயன்படுத்துவதற்காக நீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக சிறுவன் தமிழரசனுக்கு வலிப்பு ஏற்பட்டு தெப்பகுழியில் நீரில் விழுந்துள்ளார்.

உடனிருந்த நண்பர்கள் விளையாடி கொண்டிருந்ததால் சிறுவன் விழுந்ததை கவனிக்காத நிலையில் நீண்ட நேரம் தேடுதலுக்கு பின் சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் அருகில் உள்ளவர்கள் மீட்டெடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தெப்பக்குளம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தெப்பக்குளம் பகுதியில் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com