Home செய்திகள் குடிநீர் வீண் பொதுமக்கள் கண்ணீர் .

குடிநீர் வீண் பொதுமக்கள் கண்ணீர் .

by mohan

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வதுவார்டு பைபாஸ் சாலை காளிமுத்து காம்ப்ளக்ஸ் பொற்குடம் அபார்ட்மெண்ட் செல்லும் வழியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி ஆறு போல சாலையில் செல்கிறது இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் குடிநீர் சிக்கனம் தேவை என வாசகம் மட்டும் எழுதி வைக்கச் சொல்லும் அதிகாரிகள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா??? இவ்வளவு குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா!!! இல்லை தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்களா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயை சரிசெய்து குடி நீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு நடவடிக்கை எடுப்பார்களா?????? மாநகராட்சி அதிகாரிகள் எதிர்பார்ப்போடும் சமூக ஆர்வலர் பொது மக்களும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com