29
மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த தகவலை அடுத்து தீவிரமாக பயணிகளை பரிசோதித்து வந்தனர் அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் பகுதியை சேர்ந்த அழகர்சாமி (வயது 38) என்பவரிடமிருந்து சோதனை செய்யப்பட்டதில் உள்ளாடையில் எலாஸ்டிக் போன்று மறைத்து வைக்கப்பட்ட 355 கிராம் எடையுள்ள சுமார் 16 லட்ச ரூபாய் மதிப்பில் தங்கம் கைப்பற்றப்பட்டது.இதுகுறித்து சுங்க இலாகாவினர் அழகர் சாமியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.