30
மதுரை மாவட்டம் விரகனூர் அருகே கோழிமேடு பகுதியில் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது இன்று திடீரென கரும்புகை கிளம்பி உள்ளது சற்று நேரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த அனுப்பானடி மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் 4 சுமார் 15க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரியவந்தது சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் இந்த தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உருகிக் நாசமானது
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.