11
மதுரை ரயில்வே இருபாலர் பள்ளி வாக்குச் சாவடியில் தெர்மல் ஸ்கேனர் – சானி டைசர் பணிக்கு ரூ 500 கொடுப்பதாக அழைத்து வரப்பட்ட இளைஞர்களுக்கு ரூ 250 மட்டுமே வழங்கப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. மதிய உணவும் வழங்கப்பட வில்லை. அனைத்து வசதிகளும் செய்து தருவதாக உறுதி அளித்து அழைத்து வர உத்தரவிட்ட அலுவலர் அந்தப் பள்ளிக்கு ஆய்விற்கு வரவே இல்லை. இரவு 9 மணி வரை வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் வேறு வழியின்றி ரூ 250 வழங்கியதை வாங்கி சென்றனர். மாநகராட்சி சார்பில் அழைத்து வரப்பட்ட இளைஞர்களுக்கு மற்ற வாக்குச்சாவடிகளில் சொன்னதை செய்திருக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.