11
மதுரைகே.புதூர் கற்பகநகர் நான்காவதுதெருவை சேர்ந்தவர் கண்ணன் 46.இவரதுதாய் கற்பகநகர் ஆறாவது தெரு சந்திப்பில் நடந்து சென்றபோது 3 மர்ம நபர்கள் அவருக்கு நன்மை செய்வது போல் நடித்தனர். அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை வாங்கி பேப்பரில் மடித்து பத்திரமாக வைத்துக்கொண்டு கொள்ளும்படி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண் வீட்டிற்குசென்று பார்த்த போது தங்க நகைக்கு பதிலாக கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் அந்த பெண் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஏமாற்றிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.