மதுரை மேல அனுப்பானடி பகுதியில் பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் ரூபா 18 .இவர் பிளஸ்டூ படித்து வந்தார். தற்போது பகுதிநேர வேலையாக மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வந்தவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.இதனால்அவரை பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரூபா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்……. (2)மூட்டுவலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்கு போட்டு தற்கொலைமதுரை பைக்காராவில் மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.மதுரை மல்லிகை தெருவை சேர்ந்தவர் சுப்பையா 67. இவர் பைக்காரா மெயின் ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்தார். இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை .இதனால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..(3)கடன் தொல்லை காரணமாகபெண் தூக்குப்போட்டு தற்கொலைமதுரைகே .புதூர் சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் சொர்ணலட்சுமி 48. இவர் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அவரால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார் .இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த சொர்ணலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மகன் ஆனந்த்பாபு கொடுத்த புகாரின் பேரில் கே.புதூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.