Home செய்திகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முதன்முறையாக DPL துபாய் நாட்டில் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு முதன்முறையாக DPL துபாய் நாட்டில் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

by mohan

தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைவர் மற்றும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் சச்சின் சிவாமாற்றுத்திறனாளிகளுக்கு முதன்முறையாக DPL துபாய் நாட்டில் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இப்போட்டிக்கு தமிழகத்திலிருந்து 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்ற அணியாக விளையாட இருக்கின்றனர்.இப்போட்டிக்கு எங்கள் பயிற்சிக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க பல மாவட்ட ஆட்சி தலைவர்கள் உதவி செய்தனர் ஓய்வு மாவட்ட ஆட்சியர் பலசந்தந்திரன் உதவி செய்தனர்.இப்போட்டிக்கு செல்ல கடைசி நேரத்தில் எங்களுக்கு வர வேண்டிய டிக்கெட் மற்றும் விசா உதவி வரவில்லை இப்போட்டிக்கு எப்படி செல்வது என்று அனைவரும் வழி தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தோம். கோவைக்கு கிரிக்கெட் விளையாட வந்திருந்த நாங்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயற்சி செய்தோம்.உடனடியாக அனுமதி கிடைத்தது. எங்களைச் சந்திக்கு ஊன்றுகோலில் உதவியுடன் சிரமப்பட்டே அவர் நடந்து வந்தார். இந்த வயதில் காலில் வலியுடன் ஊன்றுகோலை ஊன்றி நடப்பது எவ்வளவு சிரமம் என்பது மற்றவர்களை விட எங்களுக்கு மிக நன்றாக தெரியும். எங்களது இக்கட்டான சூழ்நிலையை அவருக்கு விளக்கினோம். கவனமாகக் கேட்டுக்கொண்டார்.நாங்கள் எப்படி விளையாடுவோம் என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டார். நாங்கள் விளையாடும் வீடியோவை ஆர்வமுடன் வாங்கிப் பார்த்தார். தன்னால் ஆன உதவியை செய்வதாகக் கூறி வழியனுப்பி வைத்தார்.அடுத்த நாளே எங்களுக்கு உதவி கிடைத்து விட்டது. துபாய் போட்டிக்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா சென்னை சூப்பர் ஸ்டார் அணியில் மொத்தம் உள்ள 23 பேருக்கும் உடனடியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டதுஇந்த உதவியை மாற்றுத்திறனாளிகள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். அவருக்கு நாங்கள் செய்யும் கைமாறாக எங்களது வெற்றியை சமர்ப்பிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். கமல் ஹாசன் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com