கொரானா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சமூக அமைப்புகள் உட்பட தன்னார்வ தொண்டு அமைப்புகள் கபசுர குடிநீர் விட்டமின் மாத்திரைகளை வழங்கி வருகின்றன.அந்த வகையில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை பிளாசம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு விட்டமின் மாத்திரை, இரும்புசத்து டானிக் உள்ளிட்ட மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் லெட்சுமி பசிந்தர் தலைமையில் ரோட்டரி கம்யூனிட்டி கோர் அமைப்பிடம் ஏழை எளிய மக்களுக்காக வழங்கபட்டது.இந்நிகழ்ச்சியில் சுந்தரலிங்கம் உட்பட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாலதண்டபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.