Home செய்திகள் ஒர்க்ஷாப்பில் பேட்டரிதிருடியவர் கையும் களவுமாக கைது .

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பேட்டரி திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். காளவாசல் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பெருமாள் .இவர் கோச்சடையில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இங்கு பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த பாண்டியராஜன் என்ற வினோத்குமார் 41 என்பவர் அங்கு வைத்திருந்த பேட்டரியை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை எஸ் எஸ் காலனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com