மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பாக முன்னாள் மேயரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி வி ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார்வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவரை இன்று பசுமலையில் உள்ள அவரது இல்லத்தில்மதுரையில் உள்ள மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர். செயலாளர். பொருளாளர் உட்பட அனைவரும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்குறிப்பாக கடும் தொற்று நோயான கரோனா காலகட்டத்தில் மதுரையிலுள்ள 800க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கூடிய வகையில் நிவாரணம் வழங்கி பேருதவி அளித்த வி வி ராஜன் செல்லப்பா அவர்களுக்குமதுரை மாவட்ட இசைக்கலைஞர்களின் குடும்பங்கள் முழுவதும் முழு ஆதரவை வழங்குவதாக ஒருமனதாக சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றுமதுரை பசுமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆதரவையும் தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.