ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சகாயம் கிரானைட் குவாரி முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சகாயம் . விருப்ப ஒய்வு பெற்றார்.இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்நாடு இளைஞர் கட்சியுடன் சகாயம் அரசியல் பேரவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடப்படும் என சகாயம் அறிவித்தார். சகாயம் அரசியல் பேரவையுடன் கூட்டணி அமைத்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 20 தொகுதிகளில் தமிழகத்தில் போட்டியிடுகிறது சகாயம் அரசியல் பேரவை சார்பாக மதுரை மேற்கு தொகுதியில் நாகஜோதி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.