Home செய்திகள் பாலத்தின் மீது ஜேசிபி வாகனம் மோதியதில் பாலம் சேதம்.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் போடி லயன் மேம்பாலத்தில் ஜேசிபி வாகனம் பழங்காநத்தம் பகுதியிலிருந்து காளவாசல் நோக்கி ஜேசிபி வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது பாலத்தின் மையப்பகுதிக்கு வரும்பொழுது ஜேசிபி உள்ள பின்பகுதி உள்ள டயர் திடீரென வெடித்தது இதனால் நிலை குலைந்த ஓட்டுநர் பாலத்தில் மோதி வாகனம் நின்றது சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் ஜேசிபி வாகனத்தை கிரெயின் மூலமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்துக்கு பின் பாலத்திலிருந்து வாகனத்தை கீழே இறக்கினார்கள் இதனால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்தது சுமார் இருபது நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com