Home செய்திகள் செல்போன் பறித்த 4 பேர் கைது .

மதுரை ஜெய்ஹிந்புரத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த நான்குபேரை பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை சோலைஅழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் முத்துக்குமார்29.இவர் ராமையா தெருவில் உறவினர் வருகைக்காககாக காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமார் ஜெய்ஹிந்துபுரம் போலீசில்ஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவா நகர் கருமாரி அம்மன் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சிவகுமார் 39, சிவனாண்டி 32, கார்த்தி 28 ,ஆறுமுகம் 40 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com