பாரா ஒலிம்பிக் வீரரும் தயான்சந்த் விருது பெற்றவருமான மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமார் தலைமையில் மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்டோர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்த்தில் ஈடுபட உள்ளதகவும் தியான்சந்த் ரஞ்சித்குமார் மற்றும் மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இதனிடையே பேட்டியளித்த தற்போதையை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளருமான ராஜன் செல்லப்பாமதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிமுக அரசு திட்டங்களை கொடுத்துள்ளதுஅனைத்து தரப்பு மக்களுக்காக முதல்வர் திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்யாருடைய பலத்தை நம்பி களம் இறங்கவில்லை, அதிமுகவின் பலத்தை நம்பியே நாங்கள் தேர்தலில் களம் இறங்குகிறதுமதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 5 ஆண்டுகளில் 99 சதவீதம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியை மேம்படுத்துவதற்காக திருப்பரங்குன்றத்தில் தொகுதி மாறி போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.