37
மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிஹரனி 26 .இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்டி படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் வலி ஏற்பட்டது . இதற்காக ஊசி போட்டுக் கொண்டார் .தனது கணவர் அசோக்விக்னேஷ் ஊசியை போட்டுளளார். ஊசி போட்ட சில விநாடிகளிலேயே அவருக்கு வாந்தி ஏற்பட்டது. அதனால் மயங்கிய நிலையில் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தந்தை ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.