34
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவத்தினரும் போலீசாரும் அணிவகுப்பு நடத்தினார்கள் ..வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் துணை ராணுவப் படையினர் சுமார் 50 பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர் இந்த நிலையில் திருப்பரங்குன்றம் உதவி ஆணையாளர் சண்முகம் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர் இதில் இன்ஸ்பெக்டர் சுந்தரி .காந்திமதி உள்ளிட்ட 30 போலீசார் கலந்துகொண்டனர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி ஆவணியாபுரம் சாலை சந்திப்பு வரை அணிவகுப்பு நடைபெற்றது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.