Home செய்திகள் மக்கள்தான் எஜமானர்கள் அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பேன் – மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி .

மக்கள்தான் எஜமானர்கள் அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பேன் – மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி .

by mohan

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை பேசினார்.மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு விடம் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் இந்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பில் என்ற செய்தியாளர் கேள்விக்கு மக்களுக்கான திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வந்துள்ளேன்.மதுரையின் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளேன் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் மதுரையில் கொண்டுவரப்பட்டுள்ளது.இது ஒரு 40 ஆண்டுகாலதண்ணீர் பிரச்சனையை தீர்க்க கூடிய திட்டமாகும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன் மக்களுக்கான திட்டங்களை செய்துள்ளதால் துணிந்து மக்களை சந்திக்க உள்ளேன்.மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன் அமைச்சர் செல்லூர் ராஜு விற்கு போட்டியாக களத்தில் நிற்பது திமுகவா? அமமுகா வா? நின்றால் செய்தியாளரின் கேள்விக்கு மக்கள்தான் எஜமானர்கள் ஆகவே மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பேன் மக்களின் அபிமானம் பெற்ற அமைச்சராக நான் இருப்பேன் என்றும்.தொடர்ந்து மதுரையில் 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்ற செய்தியாளர் கேள்விக்கு அதிமுக அரசு ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துள்ளது முதல்வர் அறிவித்த தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை போன்ற திட்டங்கள் பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு திட்டமாகும் பெண்களிடம் கொஞ்சம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஆகவே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.பிறந்து முதல்வர் துணை முதல்வர் ஆணைக்கிணங்க விரைவில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு பெரிய அரசியல் கட்சியில் இது போன்ற விஷயங்கள் எல்லாம் சகஜம் தான் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com