விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து நடப்பதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆலை நிர்வாகி மற்றும் ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நடவடிக்கை எடுத்து பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த எடப்பாடி அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் 6 சிலிண்டர் இலவசம் என அறிவிப்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை. 6 சிலிண்டர் இலவசமாக கொடுத்து விட்டு மற்றொரு 6 சிலிண்டரில் பணத்தை ஏற்றிவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இலவசம் என்பது ஏமாற்று வேலை இவர் ஆட்சிக்கு வர முடியாது ஆகையால் தான் இந்த அறிவிப்பு என கூறினார்மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மக்களை பற்றி கவலை படமல் விலைவாசி ஏறிக் கொண்டே வருகிறது மக்களைப் பற்றி அரசு கவலைப்படாமல் மத்திய அரசாங்கம் மூர்க்கத்தனமான முறையில் மக்களை சுரண்டுவது என நினைத்துக்கொண்டு உள்ளது கொள்ளைக்காரன் எப்படி இரவில் யாருக்கும் தெரியாமல் கொள்ளை அடிப்பான் அதேபோல் மத்திய சர்க்கார் தெரிந்தே பட்ட பகலில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறதுமக்களிடம் கொள்ளை அடிக்கும் சர்க்கார் ஆக மோடி அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறதுதேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து உரிய அவகாசம் கொடுக்க வேண்டும் தேர்தல் ஆணையம் இப்பொழுது சுதந்திரமாக செயல்பட வில்லை இது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது தேர்தலை திடீரென அறிவித்து எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் நெருக்கடிக்குள் உள்ளாக்கு உள்ளது இந்த நெருக்கடியில் சமாளிப்போம்மத்தியில் இருக்கும் பிஜேபி உடைய மோடி அமித்ஷா மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் ஜனநாயகத்தின் மீது கடுகளவும் நம்பிக்கை இல்லாமல் நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ அதை எதிர்க்கட்சி மீது பழி சுமத்த திட்டமிட்டுள்ளனர்தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க எந்த இடத்துக்கும் இறங்கி செயல்படுவார்கள். கலவரத்தை தூண்டிவிட்டு கூட ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வார்கள் என்பதற்கு மத்திய இணை அமைச்சர் வி கே சிங் அவரது பேச்சே உதாரணம். அதையும் சமாளித்து எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.அதிமுகவின் தேர்தல் அறிக்கை கசிந்து விட்டது என எடப்பாடி கூறுகிறார். இதைக்கூட பாதுகாக்க முடியாதவர்கள் இவர்கள் அதிமுக கட்சி மிகவும் பலவீனமான கட்சி என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.