Home செய்திகள் முன்விரோதத்தில்பெண் மீது தாக்குதல்போலீஸ் விசாரணை.

முன்விரோதத்தில்பெண் மீது தாக்குதல்போலீஸ் விசாரணை.

by mohan

மதுரை ஐயர் பங்களாவில் முன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அய்யர் பங்களா குறிஞ்சிதெரு ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பூங்கொடியாள் 37. இருக்கும் மதுரை ஒத்தக்கடை ராஜீவ் காந்தி முதல் தெருவைச் சேர்ந்த கணேசமூர்த்தி 35 என்பவருக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில் அய்யர்பங்களாவிற்கு சென்று கணேசமூர்த்தி பூங்கொடியை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியாள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்,வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com