Home செய்திகள் முதியோர் இல்லம் தொடங்கப்பட்டது

முதியோர் இல்லம் தொடங்கப்பட்டது

by mohan

கவின் அறக்கட்டளை சார்பில் கொடிமங்கலம் அருகில் நாகதீர்த்தம் இடத்தில் “முதியோர் இல்லம்” மிக மிக கோலாகலமாக தொடங்கப்பட்டது.சுவாமி தவதிரு ம்.அருளானந்தம் அடிகளார் தலைமை தாங்கினார். டாக்டர் K. பாண்டி,மார்ட்டின், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காவல்துறை உதவி ஆணையர் முனைவர்.ஏ. மணிவண்ணன் கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார். V.P. பழனிச்சாமி, V.P. திருகுமரன், உ மாதேவி, D. பிரபு கலந்து கொண்டனர்.குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் பெரியவர்களும் இணைந்து முதியோர் இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கவின் அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான எஸ். சித்ரா, செயலாளர் பி.சுமன், பொருளாளர் எஸ். ரவின், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.பிரவின், எஸ்.வன தேவி ஆகியோர் விழாவினை ஏற்பாடு செய்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com