Home செய்திகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் வழங்க கோரி தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் வழங்க கோரி தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு…

by mohan

ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.. வழக்கு விசாரணை பிப்ரவரி 26 க்கு ஒத்திவைப்பு… ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில்,”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறைச்சாலையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார். ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. கொரோனா காலத்தில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்க கோரி மனு அனுப்பினேன். அதற்கு மத்திய அரசின் சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்று உள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் இதனை காரணம் காட்டி ஏற்கனவே தமிழக அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளஙகோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது எனவே இதுகுறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கு என்பது 7 பேர் விடுதலை குறித்த வழக்கு ஆனால் தங்களுக்கு இரண்டு மாத சாதாரண விடுப்பு மட்டும்தான் கோரியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.. இதனை தொடர்ந்து நீதிபதிகள் சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 26 ஒத்திவைத்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!