Home செய்திகள் கிரைண்டர் கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

கிரைண்டர் கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

by mohan

மதுரைசெல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி வாஞ்சி மலர் 49 .இவருக்கு ஓம் சக்தி என்ற 19 வயது மகன் உள்ளார். இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .ஓம் சக்தி பிறந்தது முதலே அவரை விட்டுவிட்டு தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் தாய் ,மகனை வளர்த்து வந்துள்ளார் .இந்நிலையில் தாயின் நடத்தையில் மகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதை மகன்கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம்ஏற்பட்டது.இதனால்ஆத்திரம்அடைந்த.ஓம்சக்தி வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லால் தாக்கிதாய் வாஞ்சிமலரை கொலை செய்துவிட்டார். பின்னர் அங்கிருந்து சென்ற போது தகவலறிந்த போலீசார் அவரை கைது செய்தனர் .இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com