9
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் மக்கள் நலப்பேரவை சார்பில், நாட்டின் 72வது குடியரசுத் தினம் மற்றும் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நான்காம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.வெள்ளலூர் அருகே குறிச்சிப்பட்டியில் தொடங்கி ஒத்தப்பட்டி வரை 8 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இப்போட்டியில் சிறுவர்கள் சிறுமியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு ஆர்வமடன் பந்தையத்தூரத்தை கடந்தனர். இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, நினைவு பரிசு மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதுடன் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பசுமையை வலியுறுத்தும் விதமாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது ..
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.