தென்காசியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர் கீ.சு.சமீரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் தறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தென்காசி மாவட்ட கலெக்டர் டாக்டர் கீ.சு.சமீரன் காலை 08.10 மணியளவில் குடியரசு தின விழா மேடைக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்த கலெக்டர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவருடன் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் உடன் இருந்தார். அதன்பின் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். அதன் தொடர்ச்சியாக சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள்அரசு அலுவலர்களை பாராட்டி முதலமைச்சரின் பதக்கம் வழங்கினார் . சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் மேலும் தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு வழங்கிவரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, கோட்டாட்சி தலைவர் ( பொ) ஷீலா, தாசில்தார் க.சுப்பையன், தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், தென்காசி காவல்துறை ஆய்வாளர் க.ஆடிவேல், முதன்மை கல்வி அதிகாரி கருப்புசாமி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிச்செல்வன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெ.சண்முகசுந்தரம், கிரேட் சர்ச்சில் ஜெபராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.