மதுரை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர்செய்தியாளர் சந்திப்புதமிழகத்தில் தொடர்ந்து கோவிட் வாக்ஸின் சிறப்பாக நடைபெற்று வருகிறது.முதலில் நமக்கு ஏற்கனவே வந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் மூலமாக மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த அந்த தடுப்பூசி போட கூடிய நிகழ்வைத் தொடர்ந்து 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 வாக்ஸின்கள் வந்துள்ளன.அதற்குப் பின்னால் .இன்றைக்கு சென்னைக்கு விமானத்தின் மூலமாக கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 வாக்ஸின்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சென்னையில் வந்தடைந்திருக்கிறது.நானே நேரில் ஆய்வு செய்து வந்த இதுவரைக்கும் தமிழகத்தில் மொத்தம் 10 லட்சத்து 67 வாக்ஸின்கள் நமக்கு வந்திருக்கும்.இதில் 5 லட்சத்து 32 ஆயிரம் நபர்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த வாய்ப்பு இருக்கிறது.தமிழகத்தில் தொடர்ந்து 166 இடங்களில் மையங்களும்.இன்னும் கூடுதலாக மையங்கள் அதிகப்படுத்தும் திட்டம் உள்ளது.நோய் தடுப்பூசி போட்டிருந்தால் இதுவரைக்கும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு யாருக்கும் ஒரு சிறிதளவு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.ஒரு ஸ்மால் பொதுவாக மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவத் துறையைச் சார்ந்த களப்பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது.மற்றவர்கள் நம்பிக்கையோடு தொடர்ந்து போட்டிருக்காங்க அதேபோல இன்றைக்கு மிக முக்கியமான தகவல்தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குறிப்பாக சிறு சிறு மருத்துவமனை அங்கு பணிபுரியும் இரண்டு மூன்று மருத்துவர்கள் கூடிய ஒரு சிறிய மருத்துவமனையாக இருந்தாலும் சரி அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து அந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் அரசு மருத்துவனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் உடனே போட்டுக் கொள்ளலாம் என்ற செய்தியும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.