10
மதுரை அவனியாபுரம் மற்றும் எஸ் எஸ் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு போலீசார் கைது செய்தனர்.மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பள்ளி அருகே காலி இடத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விற்பனை செய்த மீனாட்சி நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி 22 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .அதுபோல எஸ்.எஸ்.காலனிபோடிலயன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ் எஸ் காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூக்காரத்தோப்பு பகுதியை சேர்ந்ததர்மர் 36 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.