Home செய்திகள் உயிர் பலி வாங்கிய பின்னும் கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலையை சரி செய்த போக்குவரத்து காவல்துறை .

உயிர் பலி வாங்கிய பின்னும் கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலையை சரி செய்த போக்குவரத்து காவல்துறை .

by mohan

மதுரை திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5 தேதி அன்று இரவு ஆரப்பாளையத்தில் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பள்ளத்தில் பள்ளம் இருப்பதை கண்டு திடீரென்று பிரேக் போட்டுள்ளார் பின்னால் வந்த கழிவுநீர் மற்றும் தனியார் வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இடம் எத்தனையோ முறை சொல்லியும் தற்போது வரை சாலையை தார் போட்டு சாலையை சரிசெய்யவில்லை முன்வரவில்லை இதனைப் பார்த்த தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்திருப்பரங்குன்றம் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். இதனால் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய் மற்றும் பழங்காநத்தம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லிங்கம் சாமி ஆகிய இருவரும் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும், இருந்த பள்ளங்களை தங்களது சொந்த முயற்சியால் டிராக்டர் மூலமாக பள்ளங்களை சரிசெய்து பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்ததால் இருவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com