Home செய்திகள் சோழவந்தான் 11 மற்றும் 12வது வார்டுகளில் திமுக மக்கள் சபை கூட்டம்

சோழவந்தான் 11 மற்றும் 12வது வார்டுகளில் திமுக மக்கள் சபை கூட்டம்

by mohan

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 மற்றும் 12வது வார்டுகளில் திமுக மக்கள் சபை கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு 12வது வார்டு செயலாளர் நாகேந்திரன் தலைமை தாங்கினார் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன் இளைஞர் அணி காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர் 11வது வார்டு செயலாளர் முத்துவேல் வரவேற்றார் நகரச் செயலாளர் முனியாண்டி முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அய்யப்பன் முன்னாள் நகர செயலாளர் சுப்புராஜ் மாவட்ட பிரதிநிதி கண்ணன் நிர்வாகி அருணா பிஎம்பி பெரியசாமி நகர அவைத்தலைவர் வேதநாயகம் பொருளாளர் எஸ் எம் பாண்டியன் முருகேசன் மாணவரணி சரவணன் ரஸ்னாபாண்டி ஒன்றிய பிரதிநிதி தவமணி சுரேஷ்பாபு பிச்சைமணி தனசேகரன் ஆகியோர் பேசினார்கள் முன்னதாக 2 வார்டுகளிலும் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று மக்களைச் சந்தித்தனர் பின்னர் நடந்த கிராமசபை கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்பும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர்படவிளக்கம்சோழவந்தான் 11 மற்றும் 12வது வார்டுகளில் திமுக மக்கள் சபை கூட்டம் நடந்தது முன்னதாக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து அதிமுகவில் நிராகரிக்கிறோம் என்ற துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com