15
மதுரை மாவட்டம் தெற்கு தொகுதியில் உள்ள வில்லாபுரம் பகுதியில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்று திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்ஸார் கோபி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் அமைமச்சர் தமிழரசி உள்ளிட்ட 500க்கும், மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பெரும்பாலன பெண்கள் வேலை வாய்ப்பின்மை , குடிநீர், ரேசன் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து குற்றம் சாட்டினர்.அதிகாரிகளிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.