சோழவந்தான் வஉசி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 136ம் ஆண்டு நிறைவுபெற்று 137 ஆம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 137 ஆம் ஆண்டு கொண்டாடி வருகிறார்கள்.இதேபோல் சோழவந்தானில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடந்தது இவ்விழாவிற்கு நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் பழனிவேல், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தென் மண்டல தலைவர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார நிர்வாகி ராமகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பாசரவணன் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் தலைவர் நாராயணன்ஜெயராம்கோனார்,அமைப்புசாரா வட்டாரத்தலைவர் சேகரன். சிறுபான்மை பிரிவு நகரத்தலைவர் பக்ரீமுகமது, ராஜீவ்காந்திபஞ்சாயத்து ராஜ் தலைவர் ரவி,மன்னாடிமங்கலம் முத்தையா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுகுமாரன் ஆகியோர் பேசினார்கள்.படவிளக்கம் சோழவந்தானில் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக காங்கிரஸ் கமிட்டி தொடங்கி 137 ஆம் ஆண்டு விழா கொண்டாடினார்கள் அப்போது முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பேசியபோது எடுத்த படம்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.