Home செய்திகள் நோயை குடிநீர் மூலம் வழங்கும் மாநகராட்சி. சுத்தமான தண்ணீருக்காக அவதிப்படும் பொதுமக்கள்

நோயை குடிநீர் மூலம் வழங்கும் மாநகராட்சி. சுத்தமான தண்ணீருக்காக அவதிப்படும் பொதுமக்கள்

by mohan

நோயை குடிநீர் மூலம் வழங்கும் மாநகராட்சி. ஒரு குடம் சுத்தமான தண்ணீருக்காக அவதிப்படும் பொதுமக்கள் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை….. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு மருதுபாண்டியர் நகர் பகத்சிங் தெரு பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பாக குழாய் மூலமாக நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது வரும் குடிநீர் மிக மிக மோசமான கழிவு நீராக வந்து கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து மாநகராட்சி புகார் எண்ணுக்கு புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் குடிநீரை அருந்தினால் குழந்தைகள் முதல் முதியோர் வரை இருக்கும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு. உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் இதனால் ஒரு குடம் குடிநீர் ரூபாய் 20 கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக .அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் தினசரி கூலி வேலை பார்க்கும் நாங்கள் ஒரு குடம் தண்ணீர் 200 ரூபாய் கொடுத்து எப்படி வாங்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இந்த தண்ணீரை துணியை உபயோகப்படுத்த முடியவில்லை எனவும் துவைத்தால் துணி சாக்கடை நாத்தம் வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா?????? எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com