கொரோனோ பாதிப்பு காரணமாக அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் பொருட்டு மதுரையில் நள்ளிரவுக்கு பதிலாக இரவு 8 மணிக்கு துவங்கிய கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி – மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழக் கூடிய மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி இரவு 8 மணிக்கு துவங்கியது.இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயரும் தமிழக ஆயர்கள் பேரவை தலைவருமான அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.சிறப்பு திருப்பலியில் கலந்து கொள்ள வந்த கிறிஸ்துவ பெருமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேராலயத்தின் பிரதான வாயிலில் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு கைகளுக்கு சானிட்டை சர் வழங்கப்பட்டது.கொரோனா கால பாதுகாப்பு காரணம் கருதி அனைவரும் காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே சிறப்பு திருப்பலி அனுமதிக்கப்பட்டனர்.வருடாவருடம் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த சிறப்பு திருப்பலியில் கொரோனா காலம் என்பதாலும் நள்ளிரவில் இல்லாமல் இரவு 8 மணிக்கு ஆரம்பித்ததாலும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.சிறப்பு திருப்பலியில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் ஆயர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக இயேசு கிறிஸ்துவின் குழந்தை உருவ பொம்மையை மேடையில் வைத்து பூஜித்து ஆராதனைகள் செய்து திருப்பலியை நடத்திவைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.