Home செய்திகள் திமுக சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா:

திமுக சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா:

by mohan

தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மேற்கு ஒன்றியம் கூ ளப்பாண்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பிற்கு தேவையான டிவி மற்றும் இருக்கைகள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அழகு லட்சுமி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் வரவேற்றார். வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ராஜா, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏவும், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி கலந்து கொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பிற்கு தேவையான டிவி, இருக்கைகள் வாங்க தி.மு.க., ஒன்றிய நிதி மூலம் ரூ.35 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அவர் பேசியதாவது:மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க., ஆட்சி முடியும் முன்னரே ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பணிகள் நிறைவடைந்து அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டது.ஆட்சி மாறியதும்மதுரை மாவட்டத்தில் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்தும், பல இடங்களில் எனது சொந்த செலவிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறேன். அதுபோல கூளப்பாண்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் தொட்டி, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது, இன்னும் 2 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக குழாய்கள் அமைக்கப்பட்டு வீட்டிலேயே தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடிந்து அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். வரும் தேர்தலில் அனைவரும் திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com