மதுரை மாவட்டம் சோழவந்தான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பட்டணம் என்ற நயினார் முகம்மது 1972 முதல் அதிமுக தொண்டராகவும் தலைமை கழக பேச்சாளராகவும் இருந்துவருகிறார் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எம்ஜிஆருடன் பிரச்சாரம் சென்ற பேச்சாளர்களில் ஒருவர் தொடர்ந்து அதிமுக கட்சிக்காக பல்வேறு மேடைகளிலும் தெருமுனை பிரச்சாரங்களிலும் பேசி வந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த வறுமையில் வாடி வருகிறார் தலைமைக்கழகம்அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார் இதனால் மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் காணப்படுகிறார் தொடர்ந்து வயோதிகத்தின் காரணமாகவும் மருத்துவமனை சென்று உடல் நலத்தை சோதிக்க கூட வசதி இல்லாமல் வாழ்ந்து வருகிறார் தற்போது வடகிழக்கு பருவமழைன் போது அவரது வீடு முற்றிலுமாக இடிந்து விட்டது இதுகுறித்து எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்
27
You must be logged in to post a comment.