Home செய்திகள் மதுரை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் வந்திருந்தபோது கூட்டத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞர் கைது

மதுரை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் வந்திருந்தபோது கூட்டத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞர் கைது

by mohan

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வந்திருந்தார்.முன்னதாக அவரை வரவேற்க ஆயிரக்கணக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும், கமலின் ரசிகர்களும் விமானநிலையத்தில் கூடியிருந்தனர்.இந்த கூட்டத்தை சாதமாக பயன்படுத்தி இளைஞர் சிலர் மொபைல் போன், பணம் உள்ளிட்டவைகளை திருடிக் கொண்டு இருந்தார்.அதேசமயம் மறுபுறம் சினேகன் அவரது ரசிகர்களிடம் செல்பி எடுப்பதில் ஆர்வமாக இருந்த போது எதார்த்தமாக பாக்கெட்டில் தனது செல்போன் இல்லாததை உணர்ந்த சினேகன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.உடனே சுதாரித்து சிநேகனின் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த இன்னொரு நபரிடம் திருட முயன்ற நபரை அருகில் இருந்தவர் கையும் களவுமாக பிடித்தனர்.தொடர்ந்து அவனுக்கு சினேகன் ரசிகர்கள் தருமடி வழங்கி விசாரித்ததில் அந்த நபர் முனியசாமி என்பதும், அவனுடன் அவனது கூட்டாளிகள் மூவர் வந்ததாகவும் தெரிவித்தான்.தொடர்ந்து அந்த நபரை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் அறிவுறுதலின் பேரில் மதுரை பெருங்குடி காவல்நிலையத்திற்கு அழைத்து புகார் அளித்தார் சினேகன். தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில், வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை என்று கறாராக தெரிவிக்கும் கமல்ஹாசனின் தீவிர விசுவாசியின் சினேகனின் செல்போனை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது தாக்குதல் நடத்தியது எந்த மாறியான வன்முறை என்ற கேள்வி எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com