Home செய்திகள் மதுரை டிவிஎஸ் நகரில் தொலைபேசியில் நண்பர் போல்பேசி ஒரு லட்சத்து 40 ஆயிரம் மோசடி போலீசார் விசாரணை.

மதுரை டிவிஎஸ் நகரில் தொலைபேசியில் நண்பர் போல்பேசி ஒரு லட்சத்து 40 ஆயிரம் மோசடி போலீசார் விசாரணை.

by mohan

மதுரை..டிவிஎஸ் நகரில் நண்பரைப் போல் தொலைபேசியில் பேசி ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 76 .சம்பவத்தன்று இவருக்கு தொலைபேசி ஒன்று வந்தது .அதில் அவருடைய நண்பரைப் போல் பேசி நம்பவைத்து ரூபாய் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் வங்கி மூலம் வாங்கி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குபதிவுசெயது மோசடி ஆசாமியைதேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com