10
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அர்ச்சனை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மகிளா காங்கிரஸ் தலைவி செல்லப்பா சரவணன் தலைமை வகித்தார். நகரத்தலைவர் முத்துப்பாண்டி மாநில எஸ்சி பிரிவு துணைத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் பழனிவேல் இனிப்புகள் வழங்கினார். மற்றும் நிர்வாகிகள் சேகரன் ,ரவி, பரம சிவம், இளைஞர் காங்கிரஸ் இளவரசன், சுந்தரம் ,லட்சுமி அம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.