Home செய்திகள் ராஜேந்திர பாலாஜி மீது உச்ச நீதிமன்றம், அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் – மதுரை வழக்கறிஞர் புகார்

ராஜேந்திர பாலாஜி மீது உச்ச நீதிமன்றம், அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் – மதுரை வழக்கறிஞர் புகார்

by mohan

மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், இரண்டு தினங்களுக்கு முன்னாள், செய்தியாளர்களிடம்  தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2 ஜி வழக்கில் ஏற்கனவே திமுக ராசாவை விடுதலை செய்யப்பட்ட வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது, இவ்வழக்கிற்க்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்க்கு முன்னாலே, 2ஜி ஊழலில் ராசா 200 கோடி ரூபாய்யை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கி உள்ளார் அது மட்டும் அல்ல   வரும் ஜனவரி மாதம் ராசா சிறைக்கு சென்று விடுவார் என்று இவர் என்னமோ உச்ச நீதிமன்ற நீதிபதி போல் சொல்லி வருகிறார், இச்செயல் உச்ச நீதிமன்றத்தையே அவமதிப்பது போல் ஆகும், ஆகையால் ராஜேந்திர பாலாஜி மீது உச்ச நீதிமன்றம் , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என உச்ச நீதிமன்ற  பொது பதிவாளர்களுக்கு தபால் போஸ்ட் செய்துள்ளேன், இவ்வாறு கூறினார்,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com