மதுரை நகர்மற்றும்புறநகரில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் நூற்றிமூன்றுபேரை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.மதுரை நகரில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களை அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். இவ்வாறாக 2020ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான தெப்பக்குளம்மூன்று, ஜெய்ஹிந்துபுரம் 5, அவனியாபுரம் 11, திடீர்நகர் ஒன்று சுப்பிரமணியபுரம் 7.,எஸ.எஸ்.காலனி14, கரிமேடு 4, தல்லாகுளம் மூன்று,செல்லூர் ஐந்து,கூடல் புதூர் நான்கு,கே.புதூர்ஒன்று,மதிச்சியம் ஐந்து,அண்ணாநகர் ஒன்பது, ரயில்வேரயில்வே பகுதியில் 1 ஆக மொத்தம் 73 பேரை நகர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் முப்பது பேரையும் குண்டர்சட்டத்தில் போலீசார் கைதுசெய்துள்ளனர்.மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் சேர்த்து மொத்தம் நூற்றிமூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.