மதுரையில் கன்டெய்னர் லாரியை ஒட்டிவந்த வடமாநில நபருக்கு தீடீர் நெஞ்சுவலி- மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை காளவாசல் புறவழிச்சாலை பைபாஸ் ரோடு பகுதியில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஹபீப் என்ற வடமாநிலத்தவர் கன்டெய்னர் லாரியை ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரியை ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே லாரியை நிறுத்துவதற்காக ஓரமாக நிறுத்தியுள்ளார் அப்பொழுது கன்டெய்னர் லாரி சகதிக்குள் சிக்கியுள்ளது அதை மீட்பதற்காக முயன்றபோது மீட்க முடியவில்லை அருகே உள்ள கிரெயின் ஒன்று மூலமாக இழுத்து விடலாம் என்று உதவியாளர்கள் என்றும் கூறியுள்ளார், இந்தநிலையில் இவரே கன்டெய்னர் லாரி மிக்க முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார் அப்பொழுது லாரியை ஒட்டி வந்த ஹபீப் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது மயங்கி விழுந்து உதவியாளர்கள் 108 அவசர கால ஊர்தியை அழைத்து அவரை பரிசோதித்த போது உயிரிழந்தார் என தெரிவித்தனர் இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்எஸ் காலனி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்