திருப்பரங்குன்றம் -புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வயல்களில் கறுப்புக் கொடியுடன் விவசாய வேலைகள் செய்த விவசாயிகள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியிலுள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் மசோதா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வயல்களில் கருப்புக்கொடி ஊன்றி எதிர்ப்பு தெரிவித்து விவசாய வேலைகள் செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லை என்றும் தனியார் முதலாளிகள் அதிக லாபம் பெறவும் விளைபொருட்களை பதுக்கி வைக்கவும் , விலையேற்றத்திற்கு மத்திய அரசு துணை போகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..