9
கொரானா எதிரொலியாக கல்லூரி இறுதியாண்டு மற்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்ற உயர்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அரியர் தேர்ச்சி என்கிற முடிவு தவறானது என கூறியிருந்தது,இந்த கருத்து அரியர் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும்,தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக்கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் ரோஜா பூ வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்,போராட்டத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் எனவும்,அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் முழக்கங்களை எழுப்பினர்.,இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரியர் மாணவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.