12
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஒன்றாக சுற்றித் திரிந்த காளை – பசுமாட்டை பிரித்து பசுமாட்டின்v உரிமையாளர் வெளியூருக்கு விற்றதால் ஏங்கித் தவித்த காளை பற்றி ஊடகங்களில் வந்த தகவலை அறிந்து கால்நடைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் வீ.பா.ஜெயபிரதீப் தனது சொந்த செலவில் விற்ற பசுமாட்டை வாங்கி வந்து மீண்டும் காளையுடன் சேர்த்து வைத்து கால்நடைகளைப் பராமரிக்க நிதி உதவி வழங்கினார்.
இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் குமார், சத்திரவெள்ளாளபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சிதம்பரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.