Home செய்திகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 7 மாத கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் சாவு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 7 மாத கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் சாவு

by mohan

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த 34 வயது பெண், 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.இந்த நிலையில் அந்தப் பெண் திடீரென மூச்சு திணறல் காரணமாக இறந்து போனார். எனவே டாக்டர்கள் அந்த பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து உறவினர்கள் அந்தப் பெண்ணின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

இதற்கிடையே குரோனோ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது இதில் அந்தப் பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதனால் அந்தப் பெண் உடலுடன் சுடுகாட்டுக்கு சென்ற உறவினர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.நாகமலை புதுக்கோட்டை அடுத்த வடிவேல் கரையைச் சேர்ந்த 29 வயது வாலிபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

இதில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை பல்நோக்கு மருத்துவமனை பிரத்தியேக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மதுரை வடிவேல் கரையை சேர்ந்த வாலிபருக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. மனைவி இப்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.தமிழகத்தில் கொரோனா நோய்க்கு முதியவர்கள் மட்டும்தான் பலியாகி வந்தனர். இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண் உள்பட 2 பலியான சம்பவம், மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!