மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணியில் அப்பள உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கொரானா நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிந்தாமணியில் உள்ள கல்லுடையான் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு கொரான நிவாரணப்பொருட்கள் வழங்கினார். சங்க துணைச் செயலாளர் இளங்கோவன் கூறுகையில் ஊரடங்கு உத்தரவால் அப்பளத்தொழில் பாதிக்கப்பட்டபோது எங்களது அப்பளத் தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ ராஜன்செல்லப்பா விடம் எங்களது கோரிக்கையை கூறினோம். அதனைத்தொடர்ந்து ராஜன் செல்லப்பா அவர்கள் முதல்வரை நேரடியாக சந்தித்து எங்களுக்கு சமூக இடைவெளியுடன் கூடிய தொழில் நடத்த அனுமதி பெற்றுத் தந்தார் இதற்காக மாண்புமிகு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதனைத் தொடர்ந்து இன்று அப்பள உற்பத்தியாளர் கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சமூக இடைவெளியுடன கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குகிறோம்.அப்பள உற்பத்தியாளர் சங்க சீனிவாசன் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.