விருதுநகர் மாவட்டம் கே. செவல்பட்டி கண்மாய் அருகே மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற செங்கல் ஏற்றி சென்ற லாரி பஞ்சர் ஏற்பட்டது சாலையோரத்தில் பஞ்சர் பார்க்கும் பணி ஈடுபட்டபோது அதே திசையில்மினி லாரி வாகனம் (வாகனம் காய்கறி ஏற்றி வந்த)அதிவேகமாக லாரியின்பின்பக்கம் மோதியதில் செங்கல் லாரியின் பின்னால் நின்று கொண்டுஇருந்த ராஜாங்கம்என்பவர் டயருக்கு அடியில் அடிபட்டு நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மாரிமுத்து,முரளி ஆகியோரை காயங்களுடன் மீட்கப்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அங்கு முதலுதவி செய்யப்பட்டு இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டன செல்லும் வழியில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்தார்.விபத்து உருவாக்கிய வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.