கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு உதவிடும் நோக்கில் 10 இலட்ச ரூபாய் மதிப்பில் மதுரையில் தேசிய செட்டியார்கள் பேரவை மற்றும் பாலமுத்தழகு குழுமம் சார்பில் அரிசி,p மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவரும், பாலமுத்தழகு குழுமத்தின் தலைவருமான ஜெகத் மிஸ்ரா வழங்கினார், கொரைனாவால் வேலை வாய்ப்பு இழந்த ஏழை, எளிய மக்களுக்கு 19 வகையான காய்கறிகள் மற்றும் அரிசி வழங்கப்பட்டது, உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் மத்திய – மாநில அரசுகள் சிறப்பாக பணி செய்கிறது, தமிழகத்திலிருந்து வியாபார ரீதியாக வெளிநாட்டுகளுக்கு சென்றவர்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர், வெளிநாட்டில் சிக்கி கொண்டவர்களை தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மகாராட்டிராவில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மகாராட்டிர அரசு பாரபட்சம் காட்டுகிறது, மகாராட்டிராவில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு குழுவை அனுப்ப வேண்டும்” என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.